Latest topics
Most Viewed Topics
Top posting users this week
No user |
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 13 on 14/09/23, 03:12 pm
Search
Log in
நமக்கு அரசியல் சார்பு வேண்டாம் ; ஆனால் அரசியல் தெளிவு தேவை.
Page 1 of 1
நமக்கு அரசியல் சார்பு வேண்டாம் ; ஆனால் அரசியல் தெளிவு தேவை.
புதிய பென்சன் திட்டம் 1.1.2004 முதல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிமுகப்படுத்தி, மன்மோகன் சிங் தலைமையிலான UPA I அரசினால் அது அமல் படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியும்.
அது பாராளுமன்றத்தில் மசோதாவாக UPA II அரசாங்கத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் சட்ட பூர்வமாக அமல் படுத்தப்பட்டதும் உங்களுக்குத் தெரியும்.
ஆனால் இந்த மசோதாவை எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களித்த மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும்தான் இந்த புதிய பென்சன் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை எவராவது உங்களுக்கு சொல்லியிருக்கிறார்களா ?
மேலும் ஒரு உண்மையும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்காது. அது தோழர். பினரயி விஜயன் தலைமையிலான மார்க்சிய கம்யூனிஸ்ட கடந்த மூன்றாண்டுகளாக ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில் இன்னமும் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட வில்லை என்பதுதான் அந்த உண்மை.
தொழிலாளியின் தோழன் என்று சொல்லிக் கொள்பவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை ரத்து செய்திருக்க வேண்டாமா ? இல்லையா ?
இங்கே போராடும் 'தோழர்கள்' அங்கே வாய் மூடி மௌனமாக உள்ளனர். இங்கே அரசியல் பேசி தொழிற்சங்கத்தை கெடுப்பவர்கள், அங்கே ஊழியரை அடங்கிப் போக சொல்லுகின்றனர். இதைத்தான் நமது பேரவை கண்டிக்கிறது.
நமது தொழிற் சங்கத்திற்குள் எந்த அரசியல் கட்சியின் நுழைவும் வேண்டாம். எந்தக் கட்சி நல்லது செய்தாலும் அதனை வாழ்த்துவோம். எந்தக் கட்சி ஊழியருக்கு தீமை செய்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவோம். இதுவே நமது கொள்கை. போஸ் அணியினர் போல நமக்கு 'Selective Amnesia' கிடையாது.
இந்தக் கருத்தின் மீது நீங்கள் விவாதிக்கலாம். நானும் தலைவரும் பதிலளிக்க காத்திருக்கிறோம்.
அது பாராளுமன்றத்தில் மசோதாவாக UPA II அரசாங்கத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் சட்ட பூர்வமாக அமல் படுத்தப்பட்டதும் உங்களுக்குத் தெரியும்.
ஆனால் இந்த மசோதாவை எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களித்த மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும்தான் இந்த புதிய பென்சன் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை எவராவது உங்களுக்கு சொல்லியிருக்கிறார்களா ?
மேலும் ஒரு உண்மையும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்காது. அது தோழர். பினரயி விஜயன் தலைமையிலான மார்க்சிய கம்யூனிஸ்ட கடந்த மூன்றாண்டுகளாக ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில் இன்னமும் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட வில்லை என்பதுதான் அந்த உண்மை.
தொழிலாளியின் தோழன் என்று சொல்லிக் கொள்பவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை ரத்து செய்திருக்க வேண்டாமா ? இல்லையா ?
இங்கே போராடும் 'தோழர்கள்' அங்கே வாய் மூடி மௌனமாக உள்ளனர். இங்கே அரசியல் பேசி தொழிற்சங்கத்தை கெடுப்பவர்கள், அங்கே ஊழியரை அடங்கிப் போக சொல்லுகின்றனர். இதைத்தான் நமது பேரவை கண்டிக்கிறது.
நமது தொழிற் சங்கத்திற்குள் எந்த அரசியல் கட்சியின் நுழைவும் வேண்டாம். எந்தக் கட்சி நல்லது செய்தாலும் அதனை வாழ்த்துவோம். எந்தக் கட்சி ஊழியருக்கு தீமை செய்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவோம். இதுவே நமது கொள்கை. போஸ் அணியினர் போல நமக்கு 'Selective Amnesia' கிடையாது.
இந்தக் கருத்தின் மீது நீங்கள் விவாதிக்கலாம். நானும் தலைவரும் பதிலளிக்க காத்திருக்கிறோம்.
J. Ramamurthy- Posts : 9
Join date : 02/09/2018
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
28/10/18, 07:15 am by Sathya Prakash K R
» general details
15/10/18, 08:53 pm by c satheesh
» exam clarification
10/09/18, 09:04 pm by c satheesh
» DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !
08/09/18, 01:18 pm by J. Ramamurthy
» IPPB ஐ நாம் ஏன் புறக்கணிக்கிறோம்?
03/09/18, 07:43 am by Muneeswaran
» General issues
03/09/18, 07:27 am by J. Ramamurthy
» நமது அணியினர் பயன் பெற தலைவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
02/09/18, 10:11 pm by mani87mkm
» அரசியல் தலையீடு ஆபத்தானது...
02/09/18, 09:38 pm by Kayveeyes
» Introduction
02/09/18, 08:15 pm by Palanimuthu